அதிமுக, பாஜக தாய் -பிள்ளை உறவா.. நான் எப்ப அப்படிச் சொன்னேன்.. தமிழிசை பொளேர்!
அதிமுக - பாஜக உறவு தாய் பிள்ளை உறவு போல் இருப்பதாக நான் கூறவில்லை என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: அதிமுக - பாஜக உறவு தாய் பிள்ளை உறவு போல் இருப்பதாக நான் கூறவில்லை என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக பாஜக தலைவர்கள் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சென்னை வந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டதாக கூறினார்.
இதைத்தொடர்ந்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சத்துணவு முட்டையில் 5000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டினார். பாஜக தலைவர்களின் இதுபோன்ற விமர்சனம் அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாய் பிள்ளைபோல் இல்லை
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது அதிமுக- பாஜக உறவு தாய்- குழந்தை உறவுபோல் இருப்பதாக நான் கூறவில்லை.
நல்லது நடக்க வேண்டும்
மத்திய மாநில அரசுகளிடையே உறவு சுமூகமாக இருந்தால்தான் நல்ல திட்டங்களை கொண்டுவர முடியும். தமிழக மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே திட்டங்கள் தீட்டப்படுகின்றன.
நாங்கள் கொண்டுவந்துள்ளோம்
ஜிஎஸ்டி மூலம் மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கு நல்ல திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம்.திமுக - காங். கூட்டணி கொண்டு வராத திட்டங்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.
கூட்டணி இல்லாத நிலையிலும்
அதிமுகவுடன் கூட்டணி இல்லாத நிலையிலும் கொண்டு வந்துள்ளோம். மத்திய, மாநில அரசுகளிடையே சுமூக நிலை இருந்தால்தான் நல்லது நடக்கும். இவ்வாறு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.