''இந்தா வாங்கிக்க''... அள்ளி அள்ளி கொடுக்கும் பாஜக: இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 45 தொகுதிகள்!!!
சென்னை: பாஜக கூட்டணியில் பச்சமுத்து என்ற பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு (ஐ.ஜே.கே.) 45 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சட்டப் பேரவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கும் பணியை பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவ், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் மேற்கொண்டு வருகின்றனர்.
ஐ.ஜே.கே. கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:
சங்கராபுரம், ரிஷிவந்தியம், பாப்பிரெட்டிபட்டி, கள்ளக்குறிச்சி (தனி), சிவகங்கை, செங்கல்பட்டு, மதுராந்தகம் (தனி), மதுரவாயல், திரு.வி.க. நகர் (தனி), காட்பாடி, குடியாத்தம் (தனி), கலசப்பாக்கம், வந்தவாசி (தனி), கிருஷ்ணகிரி, பாலக்கோடு, சேலம் மேற்கு, ஆத்தூர் (தனி), ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி, சேந்தமங்கலம் (எஸ்.டி.), கோவில்பட்டி, மதுரை வடக்கு, நத்தம், திருவையாறு, வேடசந்தூர், திருப்பத்தூர், விராலிமலை, புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, திருச்சி மேற்கு, லால்குடி, முசிறி, துறையூர் (தனி), அரவக்குறிச்சி, குன்னம், அரியலூர், நன்னிலம், பூம்புகார், திட்டக்குடி (தனி), விருத்தாசலம், நெய்வேலி, மயிலம், உளுந்தூர்பேட்டை.
இவ்வளவு தொகுதிகளை இந்தக் கட்சிக்கு பாஜக தவிர வேறு யாராலும் தர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
வச்சுக்கிட்டு எதுக்கு வஞ்சகம் செய்யனும்.. இது பாஜக பாலிஸி!