For Daily Alerts
Just In
ஜிலேபி, பூந்தி கொடுத்து சென்னையில் பாஜகவினர் கொண்டாட்டம்
நான்கு மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டுள்ளன. இதுவரை ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது பாஜக. டெல்லியில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சட்டிஸ்கரில் இழுபறிதான்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் கட்சியின் தேசியச் செயலாளர் தமிழிசை செளந்தரராஜன் தலைமையில் பாஜகவினர் திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சரவெடிகளைக் கொளுத்தியும், ஜிலேபி, பூந்தி உள்ளிட்ட இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த வெற்றிக்கு முழுமையாக மோடியே காரணம் என்று தமிழிசை கூறினார்.
English summary
Tamil Nad BJP cadres in Chennai celebrated their party's victory in Raj, MP and Delhi.
Story first published: Sunday, December 8, 2013, 15:10 [IST]