For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் பாஜக - பாமக தொண்டர்கள் இடையே பயங்கர மோதல்... பேருந்து கண்ணாடி உடைப்பு

சென்னையில் பாஜக- பாமக தொண்டர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதன் உச்சமாக பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழிசை அவதூறு கருத்து, பாஜக - பாமக தொண்டர்கள் மோதல்- வீடியோ

    சென்னை: ராமதாஸ் குறித்து தமிழிசை அவதூறு கருத்து கூறியதால் ஆத்திரமடைந்த பாஜக- பாமக தொண்டர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

    காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயிலில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தமிழிசை சௌந்தரராஜன் பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து அவதூறு கருத்து கூறினார். இதனால் பாமகவினர் கடும் கொந்தளிப்பில் இருந்தனர்.

    BJP and PMK cadres clash each other in Chennai TNagar

    ஒரு டிவி விவாத நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை சௌந்தரராஜனிடம் மரங்கள் வெட்டுவது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து கூறியுள்ளது குறித்து கேட்டனர். அதற்கு தமிழிசை கூறுகையில் மரம் வெட்டுவது பற்றியெல்லாம் இவர்கள் பேசலாமா என்று கேட்டுள்ளார். இதனால் பாமகவினர் கடும் கொந்தளிப்பில் இருந்தனர்.

    அப்போது இரு தரப்பினரிடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. இந்த சண்டை முற்றி கைகலப்பாக மாறியது. அப்போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலின்போது தியாகராயநகரில் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது. இதையடுத்து பேரணியாக வந்த பாமகவினர் 100 பேரை போலீஸார் கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    English summary
    BJP and PMK cadresclash each other in Chennai T.Nagar BJP's state head office.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X