For Daily Alerts
Just In
தமிழகத்திற்கு தண்ணீர் தராமல் தண்ணி காட்டுவதுதான் பாஜகவின் கொள்கையா?: டி.ஆர் தாக்கு
தமிழகத்திற்கு தண்ணீர் தராமல் தண்ணி காட்டுவதுதான் பாஜகவின் கொள்கையா என டி ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
தமிழகத்திற்கு தண்ணீர் தராமல் தண்ணி காட்டுவதுதான் பாஜக
சென்னை: தமிழகத்திற்கு தண்ணீர் தராமல் தண்ணி காட்டுவதுதான் பாஜகவின் கொள்கையா என டி ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் என அனைவரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர், இயக்குநர் மற்றும் லட்சிய திமுகவின் தலைவருமான டி ராஜேந்தர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கர்நாடகாவில் ஓட்டு வாங்குவதற்காக தமிழர்களுக்கு பாஜக வேட்டு வைக்கிறது என அவர் குற்றம்சாட்டினார்.
தமிழகத்திற்கு தண்ணீர் தராமல் தண்ணி காட்டுவதுதான் பாஜகவின் கொள்கையா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும், நாளை திமுக நடத்தும் போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்றும் டி ராஜேந்தர் அறிவித்துள்ளார்.
Comments
English summary
T Rajendar has questioned the BJP's policy is not giving water to Tamil Nadu. BJP is not considering tamils to get vote in Karnataka.
Story first published: Wednesday, April 4, 2018, 13:01 [IST]