பரபரப்பான சூழ்நிலையில், பாஜக மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டம் கரூரில் தொடங்கியது!
கரூர்: பாஜக மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கரூரில் இன்று தொடங்கியது.
தமிழக அரசை பாஜகதான் இயக்குகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. மெர்சல் திரைப்படம் தொடர்பாக கருத்து கூறியும் சர்ச்சையில் சிக்கியுள்ளது பாஜக.
இந்த நிலையில், கரூரில், அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உள்பட மாநில நிர்வாகிகள் பலர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசையை அப்பதவியில் இருந்து நீக்குவதா என்பது குறித்த ஆலோசனை இதில் இடம் பெறாது என்று தெரிகிறது. அதேநேரம், பாஜகவுக்கு எதிராக நடிகர்கள் கருத்து கூறிவருவதும், சமூக வலைத்தளங்களில், பாஜக தலைவர்களுக்கு எதிராக விமர்சனங்கள் அதிகரித்துள்ளது குறித்தும் ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.