இந்தியாவை இந்துஸ்தானாக மாற்றவே பாஜக முயற்சி செய்து வருகிறது: திருமாவளவன் குற்றச்சாட்டு
இந்தியாவை இந்துஸ்தானாக மாற்றவே பாஜக முயற்சி செய்து வருகிறது என்று திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை : இந்தியாவை இந்துஸ்தானாக மாற்றவே பாஜக முயற்சி செய்து வருகிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழக நலனுக்காகப் போராடுபவர்கள் பொய் வழக்கு போட்டு மத்திய மாநில அரசுகள் முடக்கப்பார்க்கிறது. இந்த நிலை தொடர்ந்தால், மக்கள் வெகுண்டு எழுவார்கள்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு அரசியல் அமைப்புகள் எழுச்சி பெற்று வருகிறது. அதை நசுக்கும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன. காவிரி விவகாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தியாவை இந்துஸ்தானாக மாற்ற வேண்டும் என்கிற ஒரே குறிக்கோளை இலக்காக வைத்து ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக செயல்பட்டு வருகிறது. இது கண்டனத்திற்குரியது என்று குறிப்பிட்டார்.