நாங்குநேரியில் நாங்கதான் போட்டியிடுவோம்.. அடம் பிடிக்கும் பாஜக- அதிர்ச்சியில் அதிமுக
Recommended Video
சென்னை: நாங்குநேரி சட்டசபை தொகுதியில் பாஜக போட்டியிட விரும்புவதால் அதிமுக அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதியில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 24-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
2 தொகுதி இடைத்தேர்தல்.. அதிமுக வேட்பாளரை எதிர்க்குமா தேமுதிக..நூல் விட்டுப் பார்க்கும் விஜயபிரபாகரன்
விருப்ப மனுக்கள் வாங்கும் திமுக
நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியும் விக்கிரவாண்டியில் திமுகவும் போட்டியிடுகின்றன. இத்தொகுதிகளில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்களை திமுக பெற்று வருகிறது.
இரண்டிலும் அதிமுக போட்டி
இதேபோல் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு அதிமுகவும் விருப்ப மனுக்களைப் பெற்று வருகிறது. இரு தொகுதிகளிலும் இன்று வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது.
நாங்குநேரியை கேட்கும் பாஜக
இந்நிலையில் நாங்குநேரியில் தாங்கள் போட்டியிட விரும்புவதாக அதிமுகவிடம் பாஜக கூறியிருக்கிறதாம். இதனால் அதிர்ந்து போயிருக்கிறதாம் அதிமுக தலைமை. 2 தொகுதிகளிலுமே போட்டியிடுவதற்கு விருப்ப மனுக்களைப் பெற்று வரும் சூழலில் இப்படி ஒரு குண்டை பாஜக வீசுகிறதே என்பது அதிமுகவின் கவலை.
எதிர்ப்பாளர்களுக்கு ஷாக் வைத்தியம்
ஆனால் பாஜகவோ, நாங்குநேரியில் நயினார் நாகேந்திரன் அல்லது பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரில் ஒருவரை நிறுத்தி வெற்ற பெற வைக்க வேண்டும்; தமிழக சட்டசபைக்குள் பாஜக மீண்டும் காலடி வைப்பதன் மூலம் எதிர்ப்பாளர்கள் முகத்தில் கரியை பூச வேண்டும் என கங்கனம் கட்டிக் கொண்டிருக்கிறதாம் பாஜக.