கோவை ஈஷா மையத்தில் உலக யோகா தினம்.. எல்லை பாதுகாப்பு படையினர் பங்கேற்பு
ஈஷா மையத்தில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.
Recommended Video
கோவை: உலக யோகா தினத்தை முன்னிட்டு கோவையில் பல்வேறு இடங்களில் யோக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எல்லை பாதுகாப்பு படை மற்றும் அதிவிரைபடை வீரர்கள் கலந்துகொண்டனர்.
சர்வதேச யோக தினம் ஆண்டு தோறும் ஜுன் 21 ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி 4-வது சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு கோவையில் பல்வேறு இடங்களில் யோக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் கோவை அடுத்த ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற சிறப்பு யோக நிகழ்ச்சியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், அதிவிரைப்படை வீரர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என 600-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு யோகா செய்தனர். இது குறித்து எல்லை பாதுகாப்பு படையினர் கூறுகையில், இந்த யோகா பயிற்சி தங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததாகவும், பணியின் இடையில் இந்த யோகா பயிற்சி தங்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க உதவும் எனவும் தெரிவித்தனர்.