For Daily Alerts
Just In
செல்போன் மோகம்: ஆம்பூரில் சிறுவன் கொலை: இளைஞர் கைது
செல்போன் மோகத்தால் ஆம்பூரில் சிறுவனை கொலை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
ஆம்பூர்: செல்போன் மோகத்தால் ஆம்பூரில் ஒரு சிறுவனை இளைஞர் ஒருவர் கொலை செய்ததை அடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
ஆம்பூரைச் சேர்ந்தவர் கிஷோர்குமார் (8). 4-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் அவருடைய தந்தையின் செல்போனை வைத்துக் கொண்டு விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த விக்னேஷ் (20) அந்த சிறுவனையும் செல்போனையும் பார்த்துவிட்டார். அவருக்கோ நீண்ட நாட்களாக ஒரு செல்போன் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.
ஆனால் அவருக்கு இருந்த பணப்பிரச்சினையால் அவரால் வாங்க முடியவில்லை. இதனால் சிறுவனிடம் இருந்து செல்போனை பறித்தார். அப்போது சிறுவன் சப்தமிட்டதால் ஆத்திரமடைந்த விக்னேஷ் சிறுவனின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டார்.
இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
Comments
English summary
Boy murders for cellphone in Ambur. Police arrest a youth in connection with this murder.
Story first published: Tuesday, April 10, 2018, 10:56 [IST]