Breaking news Live: தமிழகத்தில் மிக கன மழைக்கான ரெட் அலர்ட் வாபஸ்!
Recommended Video
சென்னை: தமிழகத்தில் விடுக்கப்பட்டிருந்த மிக மிக கன மழைக்கான ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு பெரும் நிம்மதி ஏற்பட்டுள்ளது.
அதேசமயம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக மழை பெய்து வருகிறது. பரவலாக மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.
இதனிடையே தமிழகம் மற்றும் புதுவையில் அக்டோபர் 8 வரை பரவலாக மழை பெய்யும் என்றும், ஒரு சில இடங்களில் கனமழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர்
திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
தேனியில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை, காஞ்சிபுரத்தில் பள்ளிகள், கல்லூரிகள் இன்று வழக்கம்போல் இயங்கும்
கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு
புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை
வங்கக் கடலில் 8ம் தேதி தாழ்வு நிலை உருவாகவுள்ளது
இது ஒடிஷாவை நோக்கி நகரக் கூடும் என்று கணிப்பு
மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் 8ம் தேதி மிக கன மழைக்கு வாய்ப்பு
அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் கன மழைக்கு வாய்ப்பு
தொடர் மழை காரணமாக அனைத்து மாவட்டங்களும் ஆயத்தமாக உள்ளன
தேசியப் பேரிடர் படையினர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்