தாய்க்கு இறுதிச்சடங்கினை செய்த மகள்- வெட்டிக் கொன்ற அண்ணன்.. சொத்துக்காக நடந்த சண்டை!
ராய்ப்பூர்: தாய்க்கு இறுதி சடங்கு செய்த தங்கையை அவரது அண்ணனே வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் அருகே மோடா என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண் சுனிச் பாய். இவர் தனது மகள் கீதாவுடன் வசித்து வந்தார். சொத்துக் தகராறு காரணமாக மகன் சந்தோஷ் வர்மா தனியாக வசித்து வந்தார்.
இந்தநிலையில் சுனிச் பாய் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். தாயின் விருப்பத்திற்கு ஏற்ப அவரது இறுதி சடங்கை கீதா மேற்கொண்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் வர்மா மற்றும் அவரது மகன் ஆகியோர் கீதாவை கோடாரியால் தாக்கி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, சந்தோஷ் வர்மா மற்றும் அவரது மகனை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் காயம் அடைந்த கீதாவின் சகோதரி சீதா ராய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சொத்துத் தகராறு காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளது என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் நடந்த போது ஏராளமானவர்கள் இருந்தபோதும், அதனை தடுக்க யாரும் முன்வரவில்லை என்று கீதாவின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிம் பேசிய உறவினர் ஒருவர், கொலை சம்பவம் நடந்த இடத்தில் 15 முதல் 20 பேர் வரை இருந்தனர். ஆனால் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. எல்லோருமே பயந்துவிட்டனர் என்றார்.