For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருச்சியில் கட்டட விபத்தில் 4 பேர் பலியான சம்பவம்... கட்டட உரிமையாளர் கைது

திருச்சியில் கட்டட விபத்தில் சிக்கி 4 பேர் பலியான சம்பவத்தில் கட்டட உரிமையாளர் கண்ணப்பன் கைது செய்யப்பட்டார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சியில் கட்டட விபத்தில் சிக்கி 4 பேர் பலியானதை தொடர்ந்து அதன் உரிமையாளரான சினிமா விநியோகஸ்தர் கண்ணப்பன் கைது செய்யப்பட்டார்.

Recommended Video

    அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலி-வீடியோ

    மலைக்கோட்டை அருகே உள்ள குளத்தெருவில் 3 மாடி கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த கட்டடம் நேற்று காலை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமடைந்தன.

    Building owner was arrested in Trichy residential complex collapsed incident

    அப்போது இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட கார்த்திக் , ஹரீஷ் (தந்தை, மகன்), தம்பதியான பழனி- ராசாத்தி தம்பதி உள்பட 4 பேர் உயிரிழந்துவிட்டனர். ஒன்றரை வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. எனினும் அதன் தாய், தந்தையர் இறந்துவிட்டனர்.

    அதிக மழையாலும், கட்டடம் ஸ்திரத்தன்மை அற்ற நிலையில் இருந்ததாலும் கட்டடம் இடிந்ததாக கூறப்பட்டாலும், கட்டடம் விதிகளை மீறி கட்டப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து கட்டட உரிமையாளர் கண்ணப்பனை கோட்டை போலீஸார் கைது செய்தனர்.

    English summary
    A 3 storey residential complex in Trichy collapsed yesterday results 4 death. Today Building owner Kannappan was arrested by Kottai police.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X