உனக்கென்ன மனசில் விஜயசாந்தினு நெனப்பா?.. சினிமா பாக்காதே.. டூட்டிய பாரு.. புல்லட் மிரட்டல்
Recommended Video
சென்னை: கைதிகளை அடிப்பதற்கு உன் மனசில் என்ன விஜயசாந்தினு நெனப்பா. சினிமா பார்க்காதே, டூட்டிய பாரு என்று புல்லட் நாகராஜன் பெண் ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
மதுரை மத்திய சிறையில் இருந்த புல்லட் நாகராஜனின் அண்ணன் ரமேஷ் சிறையில் இருந்த போது அவர் பெண் மருத்துவரின் முகத்தில் சட்டையை கழற்றி வீசினார். இதனால் மதுரை சிறைத் துறை எஸ்பி ஊர்மிளா, சிறைத் துறை கமாண்டோக்களை விட்டு ரமேஷை அடிக்க சொன்னார்.
இதுகுறித்து தன் தம்பியிடம் ரமேஷ் கூறியுள்ளார். இதையடுத்து புல்லட் நாகராஜன் ஊர்மிளாவுக்கு போன் செய்து மிரட்டியுள்ளார். இதையடுத்து பெரியகுளம் பெண் ஆய்வாளருக்கு நாகராஜன் மிரட்டல் விடுத்துள்ளார்.
விஜயசாந்தியா
அதுகுறித்து ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் கைதிகளை அடிப்பதற்கு எந்த சட்டத்தில் இடம் உள்ளது. எதற்காக அடிக்கிறீர்கள். கைதிகளை அடிப்பதற்கு உனக்கென்ன விஜயசாந்தினு நெனப்பா. சினிமா பாக்காதே, டூட்டிய மட்டும் பாரு.
மன்னிப்பேன்
இனிமே என் பசங்க யாரையாவது அடிச்சே வேட்டையாடிடுவேன். நீ பொம்பளங்கிறதால உன்னை எச்சரிக்கையோடு மன்னித்து விடுக்கிறேன். ஆனால் இரண்டாவது முறையும் நான் மன்னிப்பேன் என்று எதிர்பார்க்காதே.
உயிரை விடுறேன்
அதற்கு நான் ஒன்றும் கடவுள் இல்லை. தனிப்படை போட்டு இருக்கீங்களே என்னை முடிஞ்சா பிடிச்சிக்கோங்க. என்னை மட்டும் பிடிச்சிட்டீங்கன்னா நான் அதே இடத்தில் என் உயிரை விட்டு விடுகிறேன்.
மிரட்டல்
உங்கள பத்தி நான் உண்மைகளை சொன்னேன் வைங்க. உங்க எல்லாத்தையும் ரிமாண்ட் செய்யற நிலைமை வரும். ஒழுங்கா பாத்து நடந்துகோங்க. நான் போனை வச்சிடறேன் என்று கூலாக மிரட்டியுள்ளார் புல்லட்.