For Quick Alerts
For Daily Alerts
Just In
நாமக்கல்லில் லாரி மீது பேருந்து மோதி விபத்து: 3 பேர் பலி, 15 பேர் காயம்
Recommended Video
நாமக்கல்லில் லாரி மீது பேருந்து மோதி விபத்து: 3 பேர் பலி, 15 பேர் காயம்- வீடியோ
நாமக்கல்: நாமக்கல்லில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்லக்காபாளையத்தில் லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் சித்தார்த் உள்பட 3 பேர் பலியாகினர்.
மேலும் பேருந்தில் இருந்த 15 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இறந்தவர்களில் சித்தார்த்தின் உடல் மட்டுமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
Comments
English summary
A bus collided with a lorry in Pallakkapalayam in Namakkal. 3 got killed and 15 injured in this accident.
Story first published: Thursday, August 9, 2018, 7:54 [IST]