ஈரோடு அருகே 200 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து.. 2 பேர் பலி
ஈரோடு அருகே 200 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஈரோடு: 200 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து 24 பயணிகளுடன் பேருந்து ஒன்று ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. திம்பம் மலைப்பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது 26வது வளைவில் பேருந்து கவிழ்ந்தது.
இதில் 200 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்தது பேருந்து. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ராட்சத விளக்குகள் உதவியுடன் பேருந்தில் இருந்தவர்களை கயிறு கட்டி மீட்டனர்.
சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பேருந்தில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இருப்பினும் இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
[எச். ராஜா பேசியதில் தப்பே இல்லை.. மக்கள் சொல்கிறார்கள்! ]
கடுமையான பனிமூட்டம் காரணமாக மலை தெரியாததால் விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரித்து வருகின்றனர்.