பன்றியை காப்பாற்ற போய் 11 பேரை பலி கொடுத்த பஸ் டிரைவர்
மகாராஷ்டிராவில் சாலையின் குறுக்கே வந்த பன்றியை காப்பாற்ற முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
சோலப்பூர்: மகாராஷ்டிராவில் சாலையின் குறுக்கே வந்த பன்றியை காப்பாற்ற முயன்றபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள கோயிலுக்கு பக்தர்கள் பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். புனே-சோலாப்பூர் இடையே கோரிகான் என்ற இடத்தில் பேருந்து சென்றபோது சாலையின் குறுக்கே பன்றி ஒன்று ஒடிவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பேருந்து ஓட்டுநர் பன்றியை காப்பாற்றுவதற்காக பேருந்தை வளைத்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த லாரி மீது பேருந்து வேகமாக மோதியது.
இதில் பக்தர்கள் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். பன்றியை காப்பாற்ற முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.