மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை.. அமைச்சா் விஜயபாஸ்கா்
சிபிஐ ரெயிடு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை: எனக்கு மடியில் கனம் இல்லை, எனவே வழியில் பயம் இல்லை என்றும், எதுவானாலும் சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொண்டு வெளிவருவேன் என்றும் சி.பி.ஐ. சோதனை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
சிபிஐ நடத்திய ரெயிடு நேற்று நாள் முழுவதும் அரசியல் மற்றும் தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வலுவான எதிர்ப்புகள்
பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும், அல்லது தமிழக அரசு அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என கோரிக்கைகளையும் காட்டமாகவே விடுத்திருந்தனர்.
ஜெயக்குமார் பதில்
இதையடுத்து அமைச்சர் விவகாரம் குறித்து தமிழக அரசு ஏதாவது நடவடிக்கை என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சோதனைதானே நடைபெற்றது, குற்றவாளியா இல்லையா என்பதை நீதிமன்றம்தானே முடிவு என்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும்வரை பதவியிலிருந்து அமைச்சரை நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஒரு பேட்டியில் சொல்லிவிட்டு போனார்.
முழு ஒத்துழைப்பு
இந்நிலையில், நடந்து முடிந்த சிபிஐ நடத்திய சோதனை குறித்து விஜயபாஸ்கர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன். குற்றச்சாட்டு எழுப்பியதாலேயே ஒருவா் குற்றவாளி ஆகிவிடமாட்டாா்.
முழு ஒத்துழைப்பு
இந்நிலையில், நடந்து முடிந்த சிபிஐ நடத்திய சோதனை குறித்து விஜயபாஸ்கர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன். குற்றச்சாட்டு எழுப்பியதாலேயே ஒருவா் குற்றவாளி ஆகிவிடமாட்டாா்.
மடியில் கனமில்லை
என் மீது அரசியல் காழ்ப்புணா்ச்சியுடன் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்பப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் தொடா்புடைய மாதவ் ராவ் என்பவரை நான் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சந்திக்கவில்லை. எனக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. இந்த பிரச்சினையை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிா்க்கொண்டு வெளிவருவேன்" என்று தெரிவித்துள்ளார்.