For Quick Alerts
For Daily Alerts
Just In
ஜெயலலிதாவால் குற்ற உணர்ச்சி இல்லாமல் தூங்க முடியுமா?: குஷ்பு காட்டம்
சென்னை: விடுதலை என்ற ஒற்றை வார்த்தை மட்டும் உங்களை குற்ற உணர்வு இல்லாமல் தூங்க வைத்துவிடுமா என்று ஜெயலலிதாவுக்கு, காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர்களில் ஒருவரான குஷ்பு நேரடியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக உயர்நீதிமன்றம், ஜெயலலிதாவை நிரபராதி என்று தீர்ப்பளித்துள்ளது. இதுகுறித்து திமுகவில் இருந்து காங்கிரசில் சேர்ந்து, செய்தித்தொடர்பாளர் பதவிக்கு வந்துள்ள குஷ்பு காட்டமாக டிவிட் செய்துள்ளார்.
"விடுதலை என்ற ஒற்றை வார்த்தை உங்கள் குற்றஉணர்ச்சியை அகற்றிவிடாது. 18 வருடமாக, நீதிமன்ற நடைமுறையை கேலிக் கூத்தாக்கிவிட்டு, நிரபராதியாக இப்போது நடைபோடலாம். ஆனால், உங்களால், குற்ற உணர்ச்சியில்லாமல் தூங்க முடியுமா?" என்று குஷ்பு டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
Comments
English summary
Actor-politician Khushbu seems to be unhappy after AIADMK supremo J Jayalalitha was cleared of involvement in a corruption scandal today.
Story first published: Monday, May 11, 2015, 18:41 [IST]