திரிபுராவில் லெனின் சிலையை போல, தமிழகத்தில் பெரியார் சிலை வீழும்: பாஜக நிர்வாகி பகிரங்க மிரட்டல்
Recommended Video
சென்னை: திரிபுராவில் லெனின் சிலையை அகற்றியதை போல தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்று பாஜக நிர்வாகி பகிரங்கமாகவே டிவிட்டரில் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுராவில் சமீபத்தில் நடந்த தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. கடந்த சனிக்கிழமைதான் தேர்தல் ரிசல்ட் வெளியான நிலையில், திங்கள்கிழமையான நேற்று, திரிபுராவில் லெனின் சிலை புல்டோசர் வைத்து இடிக்கப்பட்டுள்ளது. லெனின் வன்முறையாளர் என்றும், தீவிரவாதி என்றும் பாஜகவின் வலைத்தள பதிவர்களால் வசைபாடப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், "திரிபுராவில் லெனின் வீழ்ச்சியை பாஜக உறுதி செய்தது. தமிழ்நாட்டிலும் ஈ.வே.ராமசாமி (பெரியார்) சிலை வீழ்வதை பார்க்க காத்திருக்க முடியாது" என்று பாஜகவின் தமிழ்நாடு இளைஞர் பிரிவு துணை தலைவர் சூர்யா டுவிட் செய்துள்ளார்.
BJP successful completed the fall of Lenin in #Tripura ! Can’t wait for the fall of EV Ramasamy statues in Tamil Nadu. Good Night all. pic.twitter.com/36S1fsPfWZ
— SG Suryah (@SuryahSG) March 5, 2018
இந்த பகிரங்க மிரட்டலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. நெட்டிசன்கள் பலரும் இவரது டுவிட்டுக்கு காட்டமாக பதிலளித்து வருகிறார்கள்.