இவர்களுக்கு பால், மருந்து அவசரமாக தேவைப்படுகிறது: ப்ளீஸ் உதவுங்கள்..
சென்னை: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவைப்படும் பொருட்கள் குறித்த விபரங்கள் ட்விட்டரில் வெளியிடப்பட்டு வருகிறது.
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஏராளமான தன்னார்வலர்கள் உதவி செய்து வருகிறார்கள். பலர் உணவு, பால், தண்ணீர் கேட்டு ட்விட்டரில் கோரிக்கை விடுகிறார்கள்.
அப்படி நிவாரணப் பொருட்கள் தேவைப்படுபவர்களுக்கு உதவ முடிந்தவர்கள் உதவுங்களேன்.
|
பால்
வியாசர்பாடியில் 150 பேருக்கு 7.12.2015 காலை பால் தேவை. தயவு செய்து தொடர்பு கொள்க
பாபு: 9600172713
தினேஷ்: 9790825450
|
உதவி
தி. நகர் கிளப்பிற்கு எதிரே உள்ள சதர்ன் கிரஸ்ட் ஹோட்டலில் வெள்ள நிவாரண முகாம் அமைக்கப்பட்டுள்ளது. நிவாரணப் பொருட்கள் அளிக்க யாராவது விரும்பினால் தாராளமாக அளிக்கலாம்.
|
மருத்துவ உதவி
#VERIFIED #Chennai ஜாபர்கான்பேட்டை முகாமில் உள்ள 2 ஆயிரத்து 500 பேருக்கு மருந்துகள் தேவைப்படுகிறது. மருந்துகளின் விபரம் அறிய சந்தியாவை 9566224082 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். அவசரம்.
|
சைதாப்பேட்டை
சைதாப்பேட்டையில் உள்ள தன்னார்வலர்களே இந்த பொருட்கள் இன்னும் தேவைப்படுகிறதா என்று யாராவது பார்க்க முடியுமா? #ChennaiRainsHelp #aidneeded