ஆர்.கே.நகரில் தேர்தல் அதிகாரியை சந்திக்க விடாமல் கெடுபிடி.. மர்மமாக இருப்பதாக வேட்பாளர்கள் குமுறல்
சென்னை: ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியை செய்தியாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் கூட சந்திக்க முடியாத அளவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஆர்.கே.நகரில், தேர்தல் அதிகாரியின் கெடுபிடியால், வேட்புமனு ஏற்கப்பட்டவர்கள் கூட தேர்தல் அதிகாரியை பார்க்க முடியவில்லை. இதுகுறித்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் கூறுகையில், "தேர்தல் அதிகாரியை தொடர்பு கொள்ள போன் செய்தேன். முதலில் ரிங் ஆனது. எடுக்கவில்லை. பிறகு போன் சுவிட்ச் ஆப் என்று வருகிறது. துணை தேர்தல் அதிகாரிகள் எண்களும் இன்னும் வெளியிடப்படவில்லை" என்றார்.
மனு தள்ளுபடிக்கு உள்ளானவர்கள் அதிகுறித்து விளக்கம் கேட்க தேர்தல் அதிகாரியை தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது. இதனால் பரபரப்பு நிலவுகிறது.
ஏன் இப்படி மர்மமான சூழ்நிலை நிலவுகிறது என்ற கேள்வியை வேட்பாளர்கள் எழுப்புகிறார்கள். இப்படி வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருந்தால் தேர்தல் எப்படி நியாயப்படி நடக்கும் என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.