For Daily Alerts
Just In
திண்டுக்கல் அருகே பேருந்தும் காரும் மோதி விபத்து.. 4 பேர் பலி
திண்டுக்கல் அருகே காரும் பேருந்தும் நேருக்குநேர் மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே காரும் பேருந்தும் நேருக்குநேர் மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
திண்டுக்கல் அருகே இருக்கும் ஒட்டன்சத்திரம், பாலகானூத்து பிரிவு சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. திண்டுக்கல் நோக்கி சென்ற கார் எதிரே வந்த பேருந்து மீது வேகமாக மோதி இருக்கிறது.
இதில் காரில் பயணித்த நான்கு பேரும் மரணம் அடைந்துள்ளனர். காரில் சென்றவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், இதில் 2 பேர் பெண்கள்.
இவர்கள் உடல் பிரதேச பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விபத்தில் அடிபட்டவர்கள் திண்டுக்கல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
Comments
English summary
Car-Bus accident kills 4people near Dindigul. Passengers in the car died on the spot.
Story first published: Sunday, April 1, 2018, 11:24 [IST]