For Daily Alerts
Just In
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் இன்று காலை துவங்கியது.
திருவாரூர் தேருக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய தேர் எனப்படுவது ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள ஆண்டாள் கோயில் தேராகும். ஆண்டுதோறும் ஆடிப்பூரத்தில் நடைபெறும் தேரோட்டம் மிகவும் புகழ்பெற்றது.
இவ்வாண்டுக்கான தேரோட்டம் இன்று காலை துவங்கியது. தேரோட்டத்தை எம்எல்ஏ சந்திர பிரபா, மாவட்ட கலெக்டர் சிவஞானம் வடம்பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.
தேரோட்டத்தையொட்டி, விருதுநகர் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமு்றை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
Comments
English summary
Car festival started at Srivilliputhur Andal Temple on today morning.
Story first published: Monday, August 13, 2018, 8:36 [IST]