காவிரி மேலாண்மை வாரியம் கோரி கல்லணையில் விவசாயிகள் போராட்டம்: பாரதிராஜா, சீமான் பங்கேற்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திருச்சி கல்லணையில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் இயக்குனர் பாரதிராஜா கலந்து கொண்டு இருக்கிறார்.
Recommended Video
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திருச்சி கல்லணையில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் இயக்குனர் பாரதிராஜா கலந்து கொண்டு இருக்கிறார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல போராட்டங்களுக்கு பிறகும் மத்திய அரசு மறுத்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த பிரச்சனையில் மத்திய அரசு துரோகம் செய்ததாக கூறி விவசாயிகள் போராடி வருகிறார்கள்.
இந்த நிலையில் காவிரி பிரச்சனைக்காக கல்லணையும் போராட்ட களமாக மாறியுள்ளது. தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையை சேர்ந்த டெல்டா விவசாயிகள் கல்லணையில் போராட்டம் செய்து வருகிறார்கள். விவசாயிகளுடன் மாணவர்கள், மற்ற விவசாய சங்கங்கள் கலந்து கொண்டு உள்ளது.
கல்லணையில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு இயக்குனர் பாரதிராஜா ஆதரவு தெரிவித்து இருக்கிறார். அவர் சென்னையில் இருந்து இன்று காலை திருச்சி சென்று போராட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்.
இந்த போராட்டத்தில் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்கும் விதத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. 500க்கும் மேற்பட்ட போலீஸ் அங்கு குவிக்கப்பட்டு இருக்கிறது.