காவிரி விவகாரம் முள்ளில் போடப்பட்ட சேலை போன்றது.. சொல்கிறார் பொன் ராதாகிருஷ்ணன்
காவிரி விவகாரம் முள்ளில் போடப்பட்ட சேலை போன்றது என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தஞ்சை: காவிரி விவகாரம் முள்ளில் போடப்பட்ட சேலை போன்றது என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், காவிரி நீர் விவகாரம் முள்ளில் போடப்பட்ட சேலை போன்றது.
சேலையை முள்ளில்போட்டது திமுகதான். அது சுக்கு நூறாக வேண்டும் என்பதும் அதன் எண்ணம்.ஒரு மாதத்திற்கு பிறகு கர்நாடக அரசிடம் காவிரி பிரச்னை குறித்து பேசவுள்ளேன்.
காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு நல்ல முடிவு வரும். காவிரி விவகாரம் குறித்து பேச கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை சந்திப்பேன். இந்த சந்திப்பு தமிழகம் - கர்நாடகா இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில் சந்திப்பு இருக்கும்.
முதல்வர் எடியூரப்பாவுக்கு ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் கொடுத்திருப்பது சரியே. ஆளுநர் சட்டசபையில் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பார். இவ்வாறு மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.