காவிரி விவகாரம்: தமிழகத்தில் நாளை பந்த்.. பஸ்கள் இயக்கத்தை ரத்து செய்தது கர்நாடகா
சென்னை: காவிரியிலிருந்து நீர் தர மறுக்கும், கர்நாடகாவைக் கண்டித்து, நாளை, தமிழகம் முழுவதும் நாளை பந்த் நடத்த உள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது. இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. பந்த்தையொட்டி, கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் அந்த மாநில பஸ்கள் நாளை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவை கண்டித்தும், நீரை முறைப்படி மத்திய அரசு பெற்றுத் தர வலியுறுத்தியும், நாளை, மாநிலம் முழுவதும் பந்த் நடத்துகிறது, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு.

இதற்கு, விவசாயிகள் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், வணிகர் சங்கங்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர் அமைப்புகள் என, பல தரப்பிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திமுக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் பந்த்துக்கு ஆதரவு அளித்துள்ளன. பந்தின் போது, ரயில் மறியல், சாலை மறியல் போராட்டங்களும் நடத்தப்பட உள்ளன. சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில், விவசாயிகள் மறியல் செய்ய உள்ளனர். ஸ்டாலின் பங்கேற்பார் என தெரிகிறது.
பல்லாவரம் ரயில் மறியல் போராட்டத்தில், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சியினரும், கோயம்பேட்டில் நடக்கும் சாலை மறியல் போராட்டத்தில், தேமுதிகவும் பங்கேற்க உள்ளன.
டெல்லி நாடாளுமன்றம் முன், தமிழக எம்.பிக்கள் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த ஆர்பாட்டத்தில் அதிமுக எம்.பிக்கள் பங்கேற்கவும் அனுமதி வழங்க வேண்டும் என்று விரும்பும், விவசாய சங்கங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பாண்டியன், முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
தமிழகத்தில் நடைபெறும் பந்த்தின்போது, கர்நாடக அரசு பஸ்கள் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புள்ளதாக கருதும் அம்மாநில போக்குவரத்து துறை, பெங்களூர் உள்ளிட்ட அம்மாநில நகரங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கும் பஸ்களை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. நாளை சுமார் 600 பஸ்கள் தமிழகத்திற்கு இயக்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications