ஸ்டாலினை சந்தித்த கமல்ஹாசன்.. காவிரி ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு!
காவிரி பிரச்சனை குறித்த ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பதற்காக மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் இன்று கமல்ஹாசன் சந்திக்கிறார்.
Recommended Video
டெல்லி: காவிரி பிரச்சனை குறித்த ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பதற்காக மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் இன்று கமல்ஹாசன் சந்தித்தார்.
காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய நீர்வளத்துறை செயலர் யுபி சிங் இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார். காவிரி வழக்கில் வரைவு திட்ட அறிக்கை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேரில் ஆஜராகி, வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார்.
இதைத்தொடர்ந்து காவிரி வரைவு திட்ட அறிக்கை தமிழகத்திற்கு சாதகமாக இல்லை என்று எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இதற்கு எதிராக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது.
அதே சமயத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார். மே 19ம் தேதி இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. அந்த கூட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று கமல் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன் ஒரு பகுதியாக கமல்ஹாசன் தற்போது ஸ்டாலினை சந்தித்தார். அண்ணா அறிவாலயத்தில் அவர் ஸ்டாலினை சந்தித்துள்ளார்.