இது விவசாயிகளுக்கு மட்டுமேயான பிரச்சனை இல்லை.. சோறு சாப்பிடுகிறவர்களுக்கான பிரச்னை:நடிகர் சசிகுமார்
காவிரி விவகாரம் விவசாயிகளுக்கு மட்டுமேயான பிரச்சனை இல்லை என நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: காவிரி விவகாரம் விவசாயிகளுக்கு மட்டுமேயான பிரச்சனை இல்லை, சோறு சாப்பிடுபவர்களுக்கான பிரச்சனை என நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம் தமிழகம் பூதாகரமாகியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
காவிரி விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக திரை பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கட்அவுட் பாலாபிஷேகம், கிரிக்கெட் போன்றவற்றிற்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்து காவிரி, ஸ்டெர்லை விவகாரத்தை பார்க்கலாமே என நடிகர் விவேக் டிவிட்டியிருந்தார்.
இந்நிலையில் நடிகரும் இயக்குநருமான சசிகுமார் காவிரி விவகாரம் குறித்து டிவிட்டியுள்ளார். இது விவசாயிகளுக்கு மட்டுமேயான பிரச்சனை இல்லை. சோறு சாப்பிடுகிற ஒவ்வொருவருக்குமான பிரச்சனை.
இது விவசாயிகளுக்கு மட்டுமேயான பிரச்னை இல்லை. சோறு சாப்பிடுகிற ஒவ்வொருவருக்குமான பிரச்னை. காவிரி மேலாண்மை வாரியம் அமைவதுதான் எங்களின் ஜீவாதாரத்துக்கு ஒரே தீர்வு. உப்பிட்டவர்களை உள்ளளவும் நினை என்பார்கள். அப்படியென்றால் சோறிட்டவர்களை...? #CauveryIssue pic.twitter.com/Xwxe53cl2b
— M.Sasikumar (@SasikumarDir) April 4, 2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைவதுதான் எங்களின் ஜீவாதாரத்துக்கு ஒரே தீர்வு. உப்பிட்டவர்களை உள்ளளவும் நினை என்பார்கள். அப்படியென்றால் சோறிட்டவர்களை...? என கேட்டு விவசாயிகளுக்கான தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.