கட் அவுட் பாலாபிஷேகம், கிரிக்கெட் மோகத்துக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்கலாமே.. நடிகர் விவேக்
கட் அவுட் பாலாபிஷேகம், தனி மனித துதி, கிரிக்கெட், சினிமா மோகத்துக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்கலாமே என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
சென்னை: கட் அவுட் பாலாபிஷேகம், தனி மனித துதி, கிரிக்கெட், சினிமா மோகத்துக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்கலாமே என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காணச்செல்லாமல் தமிழக இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் நடிகர் விவேக், காவிரி மற்றும் தூத்துக்குடி விவகாரம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட்டியுள்ளார். அதாவது கட் அவுட் பாலாபிஷேகம், தனி மனித துதி, கிரிக்கெட், சினிமா மோகம் எல்லாவற்றுக்கும் கொஞ்சம் ஓய்வு கொடுக்கலாமே.
காவிரியும், தூத்துக்குடியும் நம் வாழ்வாதாரப் போராட்டம். இளைஞர்களின் வலுவான விருப்பத்தை சார்ந்தே வெற்றி இருக்கிறது, முடிவு செய்யுங்கள். இவ்வாறு விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.