பேராசிரியை நிர்மலா தேவி மீது 200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
Recommended Video
விருதுநகர்: பேராசிரியர் நிர்மலா தேவி மீது 200 பக்க குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி தாக்கல் செய்துள்ளது.
அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரியில் கணிதத் துறை பேராசிரியராக பணிபுரிந்தவர் நிர்மலா தேவி. இவர் மதுரை பல்கலைக்கழக அதிகாரிகளுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு மாணவிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள், நிர்மலா தேவி மீது புகார் அளித்தனர். இதையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது வாக்குமூலத்தின் பேரில் உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் கருப்பசாமி, முருகனுக்காக மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக நிர்மலா தேவி வாக்குமூலம் அளித்தார்.
இந்நிலையில் நிர்மலா தேவி மீது ஏற்கெனவே குற்றப்பத்தரிக்கை தாக்கல் செய்த நிலையில் இன்று 2-ஆவது முறையாக விருதுநகர் நீதிமன்றத்தில் 200 பக்க குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி தாக்கல் செய்தது.