பேராசிரியை நிர்மலா தேவிக்கும் மாணவர் கருப்பசாமிக்கும் தொடர்பு.. ஆதாரத்தை சமர்பித்தது சிபிசிஐடி
பேராசிரியை நிர்மலா தேவிக்கும் மாணவர் கருப்பசாமிக்கும் இடையே தொடர்பு இருந்ததற்கான ஆதாரத்தை சிபிசிஐடி போலீஸ் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சமர்ப்பித்துள்ளது.
Recommended Video
மதுரை: பேராசிரியை நிர்மலா தேவிக்கும் மாணவர் கருப்பசாமிக்கும் இடையே தொடர்பு இருந்ததற்கான ஆதாரத்தை சிபிசிஐடி போலீஸ் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சமர்ப்பித்துள்ளது.
கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்தார் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி. இதுதொடர்பான தொலைபேசி ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிர்மலா தேவிக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. நிர்ர்மலா தேவி விவகாரம் தொடர்பாக தனிக்குழு அமைக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது.
குரல் பரிசோதனை
இதையடுத்து கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொலைபேசி ஆடியோவில் இருப்பது அவரது குரல்தானா என்பதை ஆய்வு செய்யும் வகையில் அண்மையில் குரல் பரிசோதனை நடத்தப்பட்டது.
ஒப்புக்கொண்ட நிர்மலா தேவி
அதில் தொலைபேசி உரையாடலில் இருப்பது நிர்மலா தேவியின் குரல்தான் என்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து நிர்மலா தேவியும் அது தனது குரல்தான் என ஒப்புக்கொண்டார்.
மாணவருடன் தொடர்பு
இந்நிலையில் பேராசிரியை நிர்மலா தேவிக்கும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி இடையே தொடர்பு இருந்ததை சிபிசிஐடி போலீஸ் உறுதி செய்துள்ளது. இருவரும் தொலைபேசியில் பேசிக்கொண்ட ஆதாரங்களை சிபிசிஐடி ஹைகோர்ட் கிளையில் சமர்ப்பித்துள்ளது.
சிபிசிஐடி எதிர்ப்பு
நிர்மலா தேவியுடன் கருப்பசாமிக்கு கூட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதால் கருப்பசாமிக்கு ஜாமீன் வழங்க கூடாது என சிபிசிஐடி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.