For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவை அருகே தொழிலதிபர் வீட்டில் ஆட்டைய போட்ட கொள்ளையர்.. 60 சவரன் நகை, ரூ.1 லட்சம் அபேஸ்

தொழில் அதிபர் வீட்டில் 60 சவரன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

By T Nandhakumar
Google Oneindia Tamil News

கோவை: கோவை அருகே தொழில் அதிபர் வீட்டில் 60 சவரன் தங்க நகை மற்றும் 1 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் கோவில்பாளையம் கவையகாளியம்மன் வீதியை சார்ந்தவர் ரூபன். தொழில் அதிபரான இவர் குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வருகிறார்.

Cbe Gold Theft

இந்நிலையில் நேற்றிரவு தனது குடும்பத்துடன் சினிமாவிற்கு கோவை நகரத்திற்கு சென்று விட்டு நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் படுக்கை அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 60 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ.1 லட்சம் கொள்ளை போனதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து கோவில்பாளையம் காவல் துறைக்கு தகவல் அளித்ததன் அடிப்படையில் தடய அறிவியல் துறையினர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அங்கு பதிவான கை ரேகையை கொண்டு பழைய கொள்ளையர்கள் யாராவது இச்செயலில் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

English summary
60 Sovereing of gold jewelery and Rs 1 lakh in cash robbery in Businessman's house near Kovai. The matter is being investigated based on the complaint filed by the police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X