For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லஞ்சப் புகார்.. ஏஜி அலுவலக பொது கணக்காளர் அருண் கோயல் உள்ளிட்ட 4 பேர் கைது

5 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற புகாரில் பொது கணக்காளர் அருண் கோயல் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: 5 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற புகாரில் பொது கணக்காளர் அருண் கோயல் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை தேனாம்பேட்டையில் டிஎம்எஸ் வளாகத்திற்கு அருகில் பொதுக்கணக்காளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறையில் கணக்கு அலுவலர்களை நியமிப்பதில் லஞ்சம் வாங்கியதாக ஊழியர்கள் சிலர் சிபிஐக்கு புகார் அளித்தனர்.

CBI arrested AG office Arun Goyal and other 4 in the bribe case

மத்திய அரசு ஊழியர்கள் சங்கம் கொடுத்த புகாரின் பேரில் சிபிஐ அதிகாரிகள் குழு இன்று மாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தலைமை கணக்கு அதிகாரி அருண் கோயல் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

அருண் கோயல் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களைக் கைப்பற்றி சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில் ரூ 5 லட்சம் லஞ்சம் பெற்ற புகாரில் பொது கணக்காளர் அருண் கோயல் மற்றும் கஜேந்திரன் ஆகியோரை சிபிஐ கைது செய்தது.தேனாம்பேட்டை அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடைபெற்ற நிலையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

English summary
CBI has arrested AG office Arun Goyal and other 4 in the bribe case. CBI was conducting raid in Chennai AG office.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X