For Daily Alerts
Just In
ஊழல் புகார் எதிரொலி... சென்னை ஏ.ஜி அலுவலகத்தில் சிபிஐ சோதனை!
சென்னை தேனாம்பேட்டை ஏஜி அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனையால் பரபரப்பு.
சென்னை : சென்னை தேனாம்பேட்டையில் பொதுக்கணக்குகள் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் டிஎம்எஸ் வளாகத்திற்கு அருகில் செயல்பட்டு வருகிறது பொதுக்கணக்காளர் அலுவலகம். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறையில் கணக்கு அலுவலர்களை நியமிப்பதில் லஞ்சம் வாங்கியதாக ஊழியர்கள் சிலர் சிபிஐக்கு புகார் அளித்துள்ளனர். மத்திய அரசு ஊழியர்கள் சங்கம் கொடுத்த புகாரின் பேரில் சிபிஐ அதிகாரிகள் குழு இன்று மாலை திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தலைமை கணக்கு அதிகாரி அருண் கோயல் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அருண் கோயல் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களைக் கைப்பற்றி சிபிரு அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
Comments
English summary
CBI conducting search at Chennai AG office after complaints received against chief AG Arun Goyal is getting bribe for appointment postings.
Story first published: Friday, March 23, 2018, 18:14 [IST]