For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கனிஷ்க் நகை நிறுவனம் மீது சிபிஐ வழக்கு பதிவு: உரிமையாளர்கள் வீடுகளில் சோதனை

14 வங்கிகளில் கடன் பெற்றுக் கொண்டு மோசடி செய்த கனிஷ்க் நகை நிறுவனத்தின் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் உள்ள கனிஷ்க் தங்க நகை நிறுவனமானது 14 வங்கிகளில் கடனை வாங்கி கொண்டு மோசடி செய்த வழக்கில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

சென்னை வடக்கு உஸ்மான் சாலையில் உள்ளது கனிஷ்க் நகை நிறுவனம். இந்த நிறுவனத்தில் நகைகள் தயாரிக்கப்பட்டு பெரிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

CBI files case against Kanishk Jewel firm

இந்நிலையில் 14 வங்கிகளில் ரூ. 824 கோடி கடனை பெற்றுக் கொண்டு அந்த நிறுவனம் மோசடி செய்துவிட்டதாக சிபிஐக்கு பாரத ஸ்டேட் வங்கி புகார் கடிதம் அனுப்பியுள்ளது.

இதைத் தொடர்ந்து அந்த நகைக் கடை உரிமையாளர் பூபேஷ் ஜெயின் தப்பியோடிவிட்டார். வங்கி மோசடியில் ஈடுபட்ட சென்னை கனிஷ்க் நிறுவனம் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இதை அடுத்து தங்கநகை நிறுவனம், உரிமையாளர்கள் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியது.

English summary
CBI files case against Kanishk jewel firm and it also conducts raids in the firm and owner's house.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X