சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது: 94% மாணவ, மாணவிகள் தேர்ச்சி
டெல்லி:சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்த தேர்வில் 94% மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். 92% மாணவிகளும், 91% மாணவர்களும் தேர்ச்சியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை www.cbseresults.nic.in, www.results.nic.in என்ற இணையதளங்களில் மாணவர்கள் பார்க்கலாம்.
இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள், சுமார் 10 லட்சத்து 67 ஆயிரத்து 900 பேர், 12ம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளனர்.
தமிழகத்தில் மட்டும் 13 ஆயிரத்து 814 பேர் எழுதியுள்ளனர். 12ம் வகுப்பு தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 22 வரை நடைபெற்றது. இந்நிலையில், 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று என மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கி ஏப்ரல் 22ம் தேதி வரை நடந்தது.
இந்த தேர்வில் டெல்லி, அஜ்மீர், சென்னை, பஞ்ச்குலா, அலகாபாத் உள்பட 10 மண்டலங்களை சேர்ந்த 22 லட்சத்து 70 ஆயிரம் மாணவ மாணவியர் எழுதினர், சென்னை, அஜ்மீர், அலகாபாத், பஞ்ச்குலா மண்டலங்களில் 10 லட்சத்து 67 ஆயிரத்து 900 பேர் எழுதினர். அவர்களில் 6 லட்சத்து 21 ஆயிரத்து 259 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 46 ஆயிரத்து 641 பேர் மாணவியர்.
கடந்த ஆண்டு இந்த மண்டலங்களில் 10 லட்சத்து 40 ஆயிரத்து 368 பேர் தேர்வு எழுதினர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 2.65 சதவீதம் மாணவ மாணவியர் அதிகமாக 12ம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளனர். தமிழகத்தில் 13,814 பேர் இந்த தேர்வினை எழுதியுள்ளனர். நாடு முழுவதும் 1 லட்சத்து 6 ஆயிரத்து 746 பேர் தனித் தேர்வர்களாக எழுதியுள்ளனர்.
இந்நிலையில், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை www.cbseresults.nic.in, www.results.nic.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். இந்த தேர்வில் 94% மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். 92% மாணவிகளும், 91% மாணவர்களும் தேர்ச்சியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.