பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா.. மத்திய அரசுக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை!!
முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா மற்றும் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என தமிழக அமைச்சரவை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
சென்னை: முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா மற்றும் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என தமிழக அமைச்சரவை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
தமிழக அமைச்சரவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறினார்.
மேலும் முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும் தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்டிரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி சென்டிரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டவும் மத்திய அரசுக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது.