தலித்துகள், முஸ்லீம்களுக்கு எதிராக பிரைவேட் ராணுவம்.. எச்சூரி பரபரப்பு பேச்சு
சென்னை: யார் எதை சாப்பிட வேண்டும் என்பதை 'பிரைவேட் ராணுவம்' தீர்மானிக்கிறது. தலித்துகள், முஸ்லிம்களுக்கு எதிராக பிரைவேட் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் மற்றும் சட்டசபை வைரவிழாவில் கலந்து கொண்டு அவர் பேசியபோது,
சேலம் உருக்காலை தனியார்மயமாவதை தடுத்தவர் திமுக தலைவர் கருணாநிதி. வருடத்திற்கு 2 கோடி வேலைவாய்ப்பு தருவதாக மத்திய அரசு உறுதியளித்தது. ஆனால் தற்போது வேலைவாய்ப்பு அளவு குறைந்து கொண்டு வருகிறது.
மோடி அரசில் ஆண்டுதோறும் சராசரியாக 12 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள். தமிழக விவசாயிகள் டெல்லியில் எலியை சாப்பிட்டு போராட்டம் நடத்தினர். விவசாயிகள், இளைஞர்களுக்கு எந்த விடிவுகாலமும் இந்த ஆட்சியில் இல்லை
மதரீதியாக மக்களை பிரிப்பது மட்டுமே மத்திய அரசின் வேலையாக உள்ளது. யார் எதை சாப்பிட வேண்டும் என்பதை 'பிரைவேட் ராணுவம்' தீர்மானிக்கிறது. தலித்துகள், முஸ்லிம்களுக்கு எதிராக பிரைவேட் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.