For Daily Alerts
Just In
தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்தது: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சென்னை: லோக்சபா தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
16வது லோக்சபா தேர்தல் 9 கட்டங்களாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த வெள்ளியன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் பட்டன. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப் பட்டன.
அதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், லோக்சபாதேர்தல் நடைமுறைகள் அனைத்தும் முடிந்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டு விட்டதால், தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்படுகின்றன' என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Comments
lok sabha election 2014 election results 2014 election commission லோக்சபா தேர்தல் 2014 தேர்தல் முடிவுகள் 2014 தேர்தல் ஆணையம்
English summary
The Election Commission of India has stated that Model Code of Conduct is enforced from the date of announcement of election schedule by the Election Commission and is operational till the process of elections is completed.
Story first published: Monday, May 19, 2014, 13:02 [IST]