மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மாஜி கலெக்டர் சந்திரலேகா... சீமானைக் கைது செய்ய கோரிக்கை
மதுரை: முன்னாள் மதுரை கலெக்டரும், சுப்பிரமணியசாமி கட்சியைச் சேர்ந்தவருமான சந்திரலேகா நாம் தமிழர் தலைவர் சீமானைக் கைது செய்யக் கோரிக்கை விடுத்துள்ளார்.
நீண்ட காலமாக சுப்பிரமணியசாமியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார் சந்திரலேகா. இந்த நிலையில் இன்று முற்பகல் அவர் மதுரை கலெக்டர் அலுவலகம் வந்து ஆட்சித் தலைவர் சுப்பிரமணியத்தை சந்தித்தார்.
பின்னர் வெளியில் வந்து செய்தியாளர்களிடம் பேசியபோது, முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தேன்.
அடுத்து, இந்து கடவுளை புண்படுத்தி பேசிய சீமான் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட காவல்துறை ஆணையருக்கு புகார் கொடுக்கப் போகிறேன்.
கோவில்களின் நிர்வாகத்திலிருந்து அரசும் அறநிலையத்துறையும் ஒதுங்கிக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு முழுவதும் கோவில்களின் நிர்வாகத்தை அந்தந்த கோவில் குருக்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றார் அவர்.