சென்னை கடற்கரை- தாம்பரம்-செங்கல்பட்டு ரயில் சேவையில் நாளை மாற்றம்- தெற்கு ரயில்வே
சென்னை: சென்னை கடற்கரை- தாம்பரம்-செங்கல்பட்டு ரயில் சேவையில் நாளை டிசம்பர் 20ம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிண்டி-சைதாப்பேட்டை இடையே பராமரிப்பு பணிநடைபெற உள்ளதால் ரயில் சேவையில் மாற்றம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக புறநகர் ரயில் அட்டவணைக்குப் பதில் குறிப்பிட்ட நேரத்தில் சிறப்பு ரயில் செல்லும் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டில் இருந்து காலை 8.45, 9.05, 9.40,10.45-க்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. பகல் 11.30,11.45, 12.15, 1.00, 1.50, 2.25, 2.50 பிற்பகல் 3.05 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வழியாக கடற்கரை வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 9.30, 10.15, 11.15, பகல் 12.00, 12.30, 1.15, 1.45, 2.45 மாலை 3.45,4.15-க்கும் செங்கல்பட்டுக்கு சிறப்பு ரயில்கள் புறப்படும். கடற்கரையிலிருந்து திருமால்பூருக்கு காலை 10,11 மணிக்கு சிறப்பு ரயில்கள் புறப்படும்.
தாம்பரம்-கடற்கரை மார்கத்தில் காலை 9.45,10.15, 10.45, பகல் 11.00,11.15,11.45, 12.00, 12.45, 1.15, 1.30, 2.00, 2.15, 2.30-க்கு சிறப்பு ரயில் புறப்படும். மாலை 3.00, 3.15, 4.15, 4.30,4.55-க்கும் தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு ரயில்கள் புறப்படும்.
சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே காலை 9.45, 10.30,10.45, பகல் 11.30,11.45, 12.15, 12.45, 1.00, 1.30, 2.00, 2.30-க்கு சிறப்பு ரயில் புறப்படும். மாலை 3.00, 3.15, 3.30, 4.00, 4.30, 4.45-க்கும் கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு ரயில்கள் புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும் காலை 8.45 மணிக்கு முன்பு, மாலை 4.45க்கு பிறகும் ஞாயிறு அட்டவணைப்படி ரயில்கள் ஓடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.