For Daily Alerts
Just In
கிரானைட் முறைகேடு: அழகிரி மகன் துரை தயாநிதி உள்ளிட்டோர் மீது 5,191 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
கிரானைட் முறைகேடு வழக்கில் அழகிரி மகன் துரைதயாநிதி உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை: கிரானைட் முறைகேடு வழக்கில் மு.க. அழகிரி மகன் துரை தயாநிதி மீது மேலூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை கீழவளவு பகுதியில் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுத்தது துரை தயாநிதி நிறுவனம் என்பது வழக்கு. சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததில் அரசுக்கு ரூ257 கோடி இழப்பு என்கிறது அரசு தரப்பு.
இது தொடர்பான வழக்கி மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் துரை தயாநிதி உட்பட 15 பேர் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
மொத்தம் 5,191 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் விரைவில் விசாரணை தொடங்க உள்ளது.
mk azhagiri durai dayanidhi granite scam vinayagar chaturthi முக அழகிரி துரை தயாநிதி கிரானைட் ஊழல் குற்றப்பத்திரிகை
English summary
The Madurai Police today filed the charge sheets against Former Union Minister MK Azhagiri's son Durai Dayanidhi in illegal granite quarrying case.
Story first published: Thursday, November 16, 2017, 16:53 [IST]