தடுப்பு சுவர் சிமெண்ட்ல கட்டினாங்களா? கடல் மண்ல கட்டினாங்களா? - வீடியோ
சின்னப்பள்ளம் என்னும் மீனவ கிராமத்தில் கடல் நீர் உள்புகாதவாறு கட்டப்பட்ட தடுப்பு சுவர் இடிந்துகொண்டு உள்ளதால் அம் மக்கள் மீண்டும் கடல் நீர் உள்ளே வரும் என அச்சத்தில் உள்ளனர்.
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் கடல்நீர் ஊருக்குள் புகாதவண்ணம் கட்டப்பட்ட தடுப்பு சுவர் தரமற்ற பொருட்களால் கட்டப்பட்டதால், கட்டபப்ட்ட சில நாட்களிலேயே சேதமடைந்துள்ளது.
பம்பன் அடுத்துள்ளது சின்னப்பள்ளம் கிராமம். இங்கு 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் வசிக்கிறார்கள். இங்கு அடிக்கடி கடல் நீர் உள்புகுந்து மக்கள்மிகுந்த சிரமத்துக்கு ஆட்பட்டு வந்தனர்.
அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் என பலருக்கும் புகார் கொடுக்கப்பட்டு, ஒரு கட்டத்தில் கடல்நீர் உள்ளே புகாதவண்ணம் நீண்ட தடுப்பு சுவர் கட்டப்பட்டது. ஆனால், சுவர் கட்டப்பட்ட சில நாட்களிலேயே அதில் இருந்து மணல், சிமெண்ட் உதிர்ந்து சுவர் பலமிழக்க ஆரம்பித்துள்ளது.
இதனால்சுவர் இன்னும் சில மாதங்களிலேயே இடிந்துவிழும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். புதிதாக சிமெண்ட், மணல் என மூலப் பொருட்களை வாங்காமல் அங்கிருந்த கடல் மணலைக் கொண்டு தடுப்பு சுவர் கட்டியதால்தான் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக மீனவ மக்கள் கூறுகின்றனர்.