"சித்தியுடன்".. கொந்தளித்த அக்கா மகன்கள்.. நட்ட நடுகாட்டில் நடந்த அக்கிரமம்.. அலறிய செங்கல்பட்டு
கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞரை சகோதரர்கள் வெட்டி கொன்றுள்ளனர்
செங்கல்பட்டு: சித்தியை காதலிப்பதை பார்த்தால் யார்தான் சும்மா இருப்பாங்க? அதான், அவனை வெட்டியே கொன்றோம் என்று அக்கா மகன்கள் 2 பேர் பகீர் வாக்குமூலம் தந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்.. இவர் அதே பகுதியை சேர்ந்த நித்யா என்பவரை 8 வருஷமாக காதலித்தார்.
ஆனால் 2 பேரின் காதலுக்கும் நித்யா வீட்டில் ஒத்துக்கவில்லை.. அதனால் பெற்றோரின் எதிர்ப்பை மீறி சுரேஷூடன் பழகி வந்துள்ளார் நித்யா..
நித்யாவின் அக்கா மகன் பெயர் குபி.. இவர் சுரேஷூக்கும் நண்பர். இருவரும் நல்ல முறையில் பழகி வந்தனர்.. நிச்சயம் தங்கள் காதலுக்கு உதவுவார் என்று சுரேஷூம் நம்பி கொண்டிருந்தார்.
இந்நிலையில் குபிக்கு பிறந்த நாள் வந்தது.. அதனால், பர்த்டேக்கு பார்ட்டி வைப்பாக சொல்லி சுரேஷை அழைத்திருந்தார் குபி.. சுரேஷூம் பிறந்த நாள் விழாவுக்கு செல்வதாக சொல்லி, தன் அம்மாவிடம் 500 ரூபாயை வாங்கி கொண்டு சென்றார்.
நெல்லிக்குப்பம் - அகலம் செல்லும் சாலையில் ஒரு காட்டுப்பகுதியில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.. குபி, அவரது அண்ணன் ஷ்யாம் உள்ளிட்ட 5 பேரும் சுரேஷ்குமாருடன் சேர்ந்து மது அருந்தினர்.
ஒருகட்டத்தில் சுரேஷ் ஃபுல் போதையில் இருந்தபோது, குபி, ஷ்யாம், உட்பட நண்பர்கள் அனைவரும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுரேஷ் குமார் கொடூரமாக தாக்கி வெட்டினர்.. காட்டுப்பகுதி என்பதால் ஒருவரும் அங்கு நடமாட்டம் இல்லை.. சுரேஷ் அலறியதும் யாருக்கும் கேட்க வாய்ப்பும் இல்லை.. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அங்கேயே இறந்தார் சுரேஷ்.
இதனிடையே பர்த்டே பார்ட்டிக்கு போன மகனை காணவில்லை என்று சுரேஷின் தாயார் பல இடங்களில் தேடிப்பார்த்து, இறுதியில் திருப்போரூர் போலீசில் புகார் செய்தார்.. இதற்கு பிறகு தான் விசாரணை ஆரம்பமாகி, சுரேஷ் கொல்லப்பட்டது தெரியவந்தது.. குபி, ஷ்யாமை பிடித்து விசாரித்ததில், சித்தியை காதலிப்பது எங்களுக்கு பிடிக்கவில்லை.. அதனால் தான் வெட்டி கொன்றோம் என்று வாக்குமூலம் தந்துள்ளனர்.. தொடர்ந்து விசாரணையும் நடந்து வருகிறது.