For Daily Alerts
Just In
சென்னை விமான நிலையம் விரிவாக்கப் பணிக்கு ரூ2500 கோடி -வீடியோ
சென்னை சர்வதேச விமான நிலையம் விரிவுபடுத்தப்படும். அதற்காக மத்திய அரசு 2500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக சென்னை விமான நிலைய தலைமை அதிகாரி சந்திரமௌலி தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னை விமான நிலையம் விரிவுபடுத்தல் பணிக்காக மத்திய அரசு 2500 கோடி ஒதுக்கியுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என சென்னை விமான நிலைய தலைமை அதிகாரி சந்திரமௌலி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை என நான்கு சர்வதேச விமானநிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த விமான நிலையங்களை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம். அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் அரசின் உதவியைக் கேட்டுள்ளோம் என சென்னை விமான நிலைய தலைமை அதிகாரி சந்திரமௌலி கூறினார்.
மேலும் சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்காக மத்திய அரசு ரூ2500 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அமெரிக்க நிறுவனம், விமான நிலையத்தை கட்டுவதற்கான திட்டத்தைக் கொடுத்துள்ளது. விரைவில் பணி ஆரம்பிக்கப்படும் என சந்திரமௌலி கூறியுள்ளார்.
Comments
chennai airport central government oneindia tamil video சென்னை மத்திய அரசு நிதி ஒதுக்கீடு ஒன் இந்தியா தமிழ் வீடியோ
English summary
Chennai airport will be extended and central government has allotted 2500 cr. rupees for that extension work told Chandra mouli , chief officer of Chennai airport.
Story first published: Friday, June 9, 2017, 15:39 [IST]