For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குண்டுவெடித்ததால் அலறி ஓடிவிட்டு பையை எடுக்க திரும்ப வந்தவர் 'சந்தேகநபராக' சிக்கிய பரிதாபம்!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை போலீசார் மடக்கிய நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் அப்பாவி என்பதால் விடுவிக்கப்பட்டார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை 7.25 மணிக்கு இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இதில் சுவாதி என்ற இளம் பெண் உயிரிழந்தார். 14 பேர் படுகாயமடைந்தனர்.

Chennai blast suspect nabbed by police

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து பெட்டிகளும் தீவிர சோதனைக்குள்ளாக்கப்பட்டது. அப்போது குண்டுவெடித்த ரயிலின் பெட்டி ஒன்றில் நின்று கொண்டிருந்த நபரை போலீசார் மடக்கினர்.

Chennai blast suspect nabbed by police

அவருக்கும் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கும் தொடர்பிருக்கலாம் என்று கூறப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மருந்து நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறவர் என்றும் குண்டுவெடித்த உடன் அலறி அடித்து வெளியே தாம் ஓடியதாகவும் அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து தமது உடைமைகளை எடுக்க வந்ததாகவும் கூறியிருக்கிறார்.

அவரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவருக்கும் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கும் தொடர்பில்லை என்று கூறி போலீசார் விடுவித்துவிட்டனர்.

English summary
Chennai Central station twin blasts suspect found hiding on the train, nabbed by the Railway police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X