சென்னையில் 4 உதவி போலீஸ் கமிஷனர்கள் டிரான்ஸ்பர்!
சென்னையில் 4 உதவி காவல் ஆணையர்கள் பணி இடமாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் 4 உதவி காவல் ஆணையர்களை பணி இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று சென்னையில் பணிபுரியும் 4 உதவி காவல் ஆணையர்களை பணி இடமாற்றம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், சேலையூர் உதவி காவல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி ராயப்பேட்டை சரகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ராயப்பேட்டை சரக உதவி காவல் ஆணையர் வினோத் சாந்தாராம் சேலையூர் சரகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு பிரிவில் இருந்த உதவி காவல் ஆணையர் பாலமுருகன் அயனாவரம் சரகத்துக்குப் உதவி காவல் ஆணையராக பணி இடம் மாற்றம் செய்யப்பட்டுளார்.
அயனாவரம் சரக உதவி காவல் ஆணையர் சிராஜுத்தீன் சென்னை மேற்கு கலால் பிரிவு உதவி காவல் ஆணையராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.