For Daily Alerts
Just In
அக்டோபர் 2ஆம் தேதி சென்னையில் மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபர் 2ஆம் தேதி சென்னையில் மதுக்கடைகளை மூட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபர் 2ஆம் தேதி சென்னையில் மதுக்கடைகளை மூட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினமகா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினத்தில் ஆண்டுதோறும் தமிழகம் முழுவதும் மதுபான கடைகள் மூடப்படும்.
இந்நிலையில் வரும் 2ஆம் தேதி காந்தி ஜெந்தி தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு அன்றைய தினம் சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் உத்தரவை மீறி மதுக்கடைகளை திறந்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
English summary
Chennai collector orders to close tasmac shops in chennai on 2nd of October.
Story first published: Wednesday, September 26, 2018, 16:51 [IST]