வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்.. சென்னை மாநகராட்சி புகார் எண்கள் அறிவிப்பு!
வடகிழக்கு பருவமழை வெள்ள பாதிப்புகள் குறித்து புகார் அளிக்க சென்னை மாநகராட்சி தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது.
சென்னை: வடகிழக்கு பருவமழை வெள்ள பாதிப்புகள் குறித்து புகார் அளிக்க சென்னை மாநகராட்சி தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 48 மணி நேரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை மையம் நேற்று அறிவித்தது. இந்நிலையில், மதுரை, புதுக்கோட்டை, திருவள்ளூர், சென்னை மற்றும் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனிடையே வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு சென்னை மாநகராட்சி கட்டடத்தில் வெள்ள கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ள பாதிப்புகள் குறித்து புகார் அளிக்க சென்னை மாநகராட்சி தொலைபேசி எண்களையும் அறிவித்துள்ளது. அவை, 044-2536 7823, 044 2538 4965,
044 2538 3694, 044 2561 9511,
044- 2561 9206 இந்த எண்களை தொடர்பு கொண்டு மக்கள் மழை குறித்த தங்களின் புகார்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு அறையின் 94454 77205 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் மழை குறித்த புகாரை தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் தேங்குதல் குப்பை அதிகமாதல் பிரச்சனைகளுக்கு மக்கள், கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.